Wednesday, 16 July 2014

விவசாயியாக பிறக்கக்கூடாது: தற்கொலை செய்த தந்தை மகனிடம் கடைசியாக பேசிய வார்த்தை


ஆந்திர மாநிலத்தில் வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகனிடம் கடைசியாக பேசும்போது விவசாயியாக மட்டும் பிறக்காதே என்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விவசாயி முன்று வாரங்களுக்கு முன் மேடக் மாவட்டத்தை சேர்ந்த ராயவரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனான வம்சியை பார்க்க சென்றுள்ளார். அவனை அருகிலுள்ள டீ கடைக்கு அழைத்து சென்ற அவர், அவனுக்கு டீயும் பன்னும் வாங்கிக்கொடுத்த பின் ஐந்து ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் நன்றாக படிக்கவேண்டும் என்று தனது மகனுக்கு அறிவுரை கூறிய அவர், ஒரு போதும் விவசாயியாக மட்டும் மாறிவிடாதே என்று கூறியதுடன் இனி யாரும் விவசாயியாக மட்டும் பிறக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

பின்னர் பள்ளிக்கு தனது மகனுடன் சென்ற அவர், அவனது வகுப்பு ஆசிரியரான கிருஷ்ணாவிடம் மகன் நன்றாக படிக்கிறானா என்று பார்த்துக்கொள்ளுமாறு கூறி மகனுக்கு குட் பை சொல்லிவிட்டு சென்றார். அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து தூக்கில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. விவசாயத்தால் நொடிந்து போய் தற்கொலை செய்து கொள்வதை இனியாவது தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

No comments:

Post a Comment